தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிதமாக பரவி வரும் நிலையில், திமுக அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சருக்கு கொரோனா:
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று மக்கள் நினைத்ததை விட அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் மக்களின் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்தது. இந்த தாக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர அரசாங்கம் பல நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு தமிழகத்தில் கொரோனா வைரஸ் குறைவாக பரவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் உள்ளது. இந்நிலையில் தற்போது திமுக அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது திமுக செயலாளரும், தமிழக வீட்டு வசதி துறை அமைச்சருமான முத்துசாமி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவழியாக கொரோனா தொற்று குறைந்து விட்டது என எண்ணும் சமயத்தில் முக்கிய தமிழக அமைச்சருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, முதல்வர் ஸ்டாலின் உள்பட மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் முத்துசாமி தற்போது தன் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.