தமிழகத்தில் ஆக.21 வரை கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஆக.21 வரை கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் ஆக.21 வரை கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் ஆக.21 வரை கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணத்தால் ஒரு சில இடங்களில் மிதமான மழை மற்றும் கனமழை பெய்ய கூடும் என்ற தகவலை இந்திய வானிலை ஆய்வு துறை வெளியிட்டுள்ளது.

வானிலை :

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில மாவட்டங்களில் லேசான மழைப்பொழிவும் இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 17) மற்றும் ஆகஸ்ட் 18,19,20,21 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளின் ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

17.08.2022: நீலகிரி, கோயம்புத்தூர்‌, திண்டுக்கல்‌, தேனி, சேலம்‌, தர்மபுரி மற்றும்‌ நாமக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

18.08.2022: நீலகிரி, கோயம்புத்தூர்‌, திண்டுக்கல்‌, தேனி, சேலம்‌, தர்மபுரி, நாமக்கல்‌, கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர்‌, சிவகங்கை, மற்றும்‌ தூத்துக்குடி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்குள் வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடனும், நகரின்‌ ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்‌. அப்போது தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில்‌ இருக்கக்கூடும்‌.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here