தமிழக அரசு போக்குவரத்து துறை ஊழியர்கள் தொடர்ந்து அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். மேலும் திமுக அரசு ஆனது தேர்தல் அறிக்கையில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு நவம்பர் 2015 ஆம் தேதி முதல் இன்று வரை அகவிலைப்படியை உயர்த்தி வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை அதற்கான முடிவை எடுக்கவில்லை.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில் அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நலம் மீட்பு சங்கத்தின் தலைவர் கதிரேசன் மூத்த குடிமக்கள் 92 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களுக்கு 92 மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு மற்றும் மருத்துவ காப்பீடை உடனடியாக வழங்க வேண்டும். மேலும் இது குறித்த அறிவிப்பை திமுக தீபாவளிக்கு முன்னதாகவே தமிழக அரசும் வெளியிட வேண்டும். ஒருவேளை இது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றால் சென்னையில் போராட்டம் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.., இவர்களுக்கு ரூ.7000 தீபாவளி போனஸ்.., வெளியான பம்பர் ஆஃபர்!!!