தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி.., எப்பொழுது தெரியுமா??

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி.., எப்பொழுது தெரியுமா??
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி.., எப்பொழுது தெரியுமா??

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசை தொடர்ந்து ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை அறிவித்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அண்மையில் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இனி வரும் காலங்களில் மத்திய அரசு அறிவிக்கும் போதெல்லாம் அதற்கு நிகராக அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ரேஷன் அட்டைதரர்களே…, உங்களுக்காகவே பிரத்யேகமாக வெளியான முக்கிய அறிவிப்பு!!

இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது, இந்த அறிவிப்பு செப்டம்பர் மாதம் மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here