தமிழ்நாடு மீனவர்களுக்கு விபத்து காப்புறுதி திட்டம்., ரூ.4.10 கோடி நிவாரண நிதி., அரசாணை வெளியீடு!!!

0
தமிழ்நாடு மீனவர்களுக்கு விபத்து காப்புறுதி திட்டம்., ரூ.4.10 கோடி நிவாரண நிதி., அரசாணை வெளியீடு!!!
தமிழ்நாடு மீனவர்களுக்கு விபத்து காப்புறுதி திட்டம்., ரூ.4.10 கோடி நிவாரண நிதி., அரசாணை வெளியீடு!!!

தமிழ்நாடு மீனவர்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் இயற்கை சீற்றங்கள் மற்றும் அசாதாரண சூழ்நிலையின் போது உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. உயிரிழக்கும் மீனவர்களின் குடும்ப நலன் கருதி “மீனவர் குழு விபத்து காப்புறுதி திட்டம்” மூலம் நிவாரண நிதியை மத்திய அரசு வழங்குகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இத்திட்டம் செயல்படாத காலமான 01.06.2020 முதல் 18.10.2021 வரை 205 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த மீனவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் உறுதி அளித்து இருந்தார். அதன்படி தற்போது மீனவர் விபத்து காப்புறுதி திட்டத்தின் கீழ் உயிரிழந்த 205 மீனவர்/மீனவ மகளிர் குடும்பங்களுக்கு ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2 லட்சம் என ரூ.4.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

திருநங்கைகள் இனி இந்த துறையிலும் சாதிக்கலாம்.., அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பஞ்சாப் அரசு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here