சட்டமன்ற தேர்தலுக்கு தபால் வாக்குமூலம் தொடக்கம் – நெறிமுறைகளை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!!

0

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக இன்று முதல் தபால் வாக்கு வழங்குவது தொடங்கப்பட்டுள்ளது. இன்று முதல் வருகிற 31ம் தேதி வரை இது நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் இந்த முறை நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக வாக்காளர்கள் பயன்படும் வகையில் பல அறிக்கைகளை தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்தார். அதில் ஒன்று தான் தபால் வாக்கு. இந்த தபால் வாக்கு 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். இதனால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தபால் வாக்கு அளிப்பதற்கு பல்வேறு விதிமுறையும் உண்டு.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தபால் வாக்குகள் அனைத்தும் ரகசியமாக இருக்கும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் இன்னும் சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் தற்போது தபால் வாக்குகளை பெறுவதற்கான வேலைகள் துவங்கப்பட்டுள்ளது. அதன்படி இதற்காக சிறப்பாக 70 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு சேகரிப்பு இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்காக பணம் பதுக்கிவைப்பு?? திமுக வேட்பாளர் வீட்டில் குவிந்த ஐடி அதிகாரிகள்!!

அதன்படி 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சென்று வாக்காளர்களால் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் 12ன் படி அந்த விவரங்கள் அனைத்தும் முதலில் உறுதி செய்யப்படும். அதன்பின்பு அவர்களுக்கு வாக்கு அளிப்பதற்கான ரசிது கொடுக்கப்படும். இந்த தபால் வாக்கு சேகரிப்பு 7 நாட்கள் நடக்கும். அதாவது வருகிற 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதற்கு பின்பு அவகாசம் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here