தமிழகத்தில் இன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் தற்போது அவர்கள் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் ஏற்படும் பாதிப்பு தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு நடவடிக்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இருந்தும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. இந்நிலையில் இதுகுறித்து தமிழக முதல்வர் பல்வேறு கட்ட ஆலோசனையை மேற்கொண்டு வருகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனை தொடர்ந்து தமிழகத்தில் இன்று 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்ட தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் புதிதாக தீர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் தற்போது கொரோனா தடுப்பு குறித்து தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
இந்தியர்களை தொடர்ந்து சிறந்த வீரர் என்ற அந்தஸ்தை பெரும் பாகிஸ்தான் வீரர் – குவியும் வாழ்த்துக்கள்!!
இதனை தொடர்ந்து தமிழகத்தின் புதிய சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ஸ்டாலின் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதன்படி தமிழக மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு விரைந்து கொண்டு வர அவர்களுடன் இணைந்து நிற்போம் என்று தெரிவித்தார். மேலும் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்று வேறுபாடுகள் இல்லாமல் மக்களின் பிரதிநிதியாக செயல்படுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.