கருணாநிதியை நினைத்து கண்கலங்கிய முதல்வர் – தாயார் ஆசியுடன் களமிறங்கும் ஸ்டாலின்!!

0

தமிழகத்தின் புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ள ஸ்டாலின் தற்போது தனது தந்தையும் மற்றும் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி புகைப்படத்திற்கு கண்ணீர் மல்க மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.

ஸ்டாலின்:

தமிழகத்தில் 125 தொகுதிகளில் தனி பெரும்பான்மையுடன் திமுக கட்சி நடந்து முடிந்த தேர்தலில் வெற்றிபெற்றது. மேலும் திமுக கட்சி கூட்டணிகளுடன் சேர்ந்து தமிழகத்தில் மொத்தம் 159 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் புதிய முதல்வராக ஸ்டாலின் இன்று காலை முதன் முறையாக பதவி ஏற்றார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்பு திமுக தமிழகத்தில் ஆட்சியமைத்துள்ளதால் திமுக தொண்டர்கள் உற்சாகமடைந்த வருகின்றனர். தமிழக முதல்வராக பதவி ஏற்ற ஸ்டாலின் முதல்வரான பின் முதன் முறையாக தனது கோபாலபுர இல்லத்திற்கு சென்றார். அங்கு சென்ற ஸ்டாலின் தனது தந்தை மற்றும் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வரான கருணாநிதி புகைப்படத்திற்கு கண்ணீர் மல்க மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வங்கி ஊழியர்கள் பணிக்கு வருவதை 50 சதவீதமாக குறைக்க நடவடிக்கை – வங்கியாளர்கள் குழுமம் அறிவுறுத்தல்!!

கண்கலங்கிய ஸ்டாலினுக்கு அவரது சகோதரி செல்வி ஆறுதல் கூறினார். பின்பு ஸ்டாலின் அவரது தாயாரான தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். தனது தந்தை மற்றும் தயார் ஆசியுடன் தற்போது தமிழகத்தில் முதல்வர் பணியில் களமிறங்குகிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here