நாடு முழுவதும் மக்கள் கொரோனா அச்சத்தில் இருப்பதால் தடுப்பூசி போடும் பணி மிக தீவிரமாக நடந்து வருகிறது. எனவே செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை மத்திய அரசு, தமிழக அரசுக்கு ஒப்பந்த அடிப்படையில் அளிக்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
குத்தகைக்கு தடுப்பூசி மையம் :
2019 ம் ஆண்டு துவங்கிய கொரோனா பேரலை முதல் மற்றும் இரண்டாம் அலை என தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் மிகுதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இறப்பு விகிதமும் அதிகரித்து வந்த நிலையில் தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. மேலும் தமிழக அரசு தடுப்பூசியின் அவசியம் குறித்து மக்களிடையே எடுத்து கூறி வந்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். எனவே செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை மத்திய அரசு, தமிழக அரசுக்கு ஒப்பந்த அடிப்படையில் அளிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தில் முதல்வர் தமிழக அரசுக்கு ஒப்பந்த அடிப்படையில் அளித்தால் உடனடியாக தடுப்பூசி உற்பத்திக்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தனியார் நிறுவன உதவியுடன் செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை செயல்படுத்துவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.