தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை
தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்து இப்போது வரை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். ஆனால் கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திண்டுக்கல், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருச்சி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு 2ம் நிலை காவலர் காலி பணியிடங்கள் – முக்கிய தகவல் வெளியீடு!!!
மேலும் இந்த மாவட்டங்களை சுற்றியுள்ள பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளனர். இதனால் பொதுமக்கள் கவனமுடன் இருக்கவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.