தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடையே கற்கும் திறன், அறிவாற்றல் உள்ளிட்டவைகளை ஊக்குவிக்க தாய்மொழி கல்வி கட்டாயம் என அரசு அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளிகளை தொடர்ந்து தனியார் பள்ளிகளிலும் தாய்மொழி கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் தனியார் பள்ளிகளின் இயக்குனர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது “அனைத்து தனியார் பள்ளிகளிலும் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுவதை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். அதிலும் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் கூடுதல் மொழியாக தமிழ் கற்பிக்கப்பட வேண்டும். தமிழ் மொழியை கற்பிக்க சிறந்த ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்.” எனவும் அறிவுறுத்தி உள்ளார்.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(23.05.2023) – முழு விவரம் உள்ளே!!
இதோடு “அனைத்து தனியார் பள்ளிகளிலும் 2024-25 ஆம் கல்வியாண்டுக்குள் தமிழ் கற்பிக்கப்பட வேண்டும். இதற்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறைகளை தனியார் பள்ளிகளின் இயக்குனர் நிர்ணயிப்பார்.” எனவும் குறிப்பிட்டுள்ளனர்.