நடிகை திரிஷா, மணிரத்னம் இயக்கி வருகிற பொன்னியின் செல்வன் படத்தில் தனது சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளதாக தகவலை வெளியிட்டுள்ளார்.
அப்டேட் வெளியிட்ட திரிஷா:
தமிழ் திரை உலகத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை திரிஷா. 96, பேட்ட உள்ளிட்ட படங்களை அடுத்து சமீப காலமாக படங்களில் ஏதும் நடிக்காமல் இருந்தார். இந்த நிலையில், அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று நாவலை அதே பெயரில் படமாக எடுக்க இயக்குனர் மணிரத்தினம் முடிவு செய்தார்.
இதனை அடுத்து, இந்த படத்தில் பிரபு, கார்த்திக், சத்யராஜ்,ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள நடிகை திரிஷா, வெகு நாட்களுக்கு பிறகு தனது சொந்த குரலில் இப்படத்திற்காக டப்பிங் பேசியுள்ளதாக தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு அதன் போட்டோவையும் வெளியிட்டுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்