நடிகர் ஷாருக்கான் படத்தில் கமிட்டாகி இருந்த நயன்தாரா தனக்கு ஏற்பட்ட கால்ஷீட் பிரச்சனை காரணமாக அந்த படத்தில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார்.
நயன்தாராவின் முடிவு:
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ் மக்களால் லேடி சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைக்கப்படும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகவும் பிரபலமாகியுள்ளார். இவர் சமீபத்தில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாக இருந்த பாலிவுட் படத்தில் கமிட்டாகி இருந்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிய இந்த படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த படத்தில் இருந்து தான் விலக உள்ளதாக நடிகை நயன்தாரா திடீரென அறிவித்துள்ளார். நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கைதாகி சிறையில் உள்ள நிலையில் இவரின் இந்த அறிவிப்பு திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், கால்ஷீட் தொடர்பான பிரச்சனையால் தாம் விலகுவதாக நயன்தாரா அறிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்