தமிழில் முன்னணி நடிகையாக உள்ள கீர்த்தி சுரேஷ் தனது திரைத்துறை சம்பளத்தை 3 கோடியாக உயர்த்தி உள்ளார்.
குவியும் பட வாய்ப்பு :
தமிழ் திரையுலகத்தின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் விஜய், ரஜினி என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து விட்டார். சமீபத்தில் இவர் நடித்த சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படமான மகாநடி என்ற படத்திற்கு தேசிய விருது வாங்கினார். இதுபோக தற்போது தமிழில் சாணி காயிதம், மலையாளத்தில் அரபிக்கடலின் சிங்கம், தெலுங்கில் சர்க்கார் வாரி பாட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
இதுவரை இரண்டு முதல் இரண்டரை கோடி வரை சம்பளம் வாங்கி வந்த இவர், தற்போது நடித்து வரும் தசரா படத்தில் மூன்று கோடி வாங்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதையடுத்து கீர்த்தியின் மார்க்கெட் எகிறி தொடங்கியுள்ளது. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்