பிரபல இசையமைப்பாளர் இனியவன் மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து திரை உலகத்தினர் பலத்த அதிர்ச்சியில் உள்ளனர்.
இசையமைப்பாளர் மறைவு :
பிரபல இசையமைப்பாளர் இனியவன் மாரடைப்பு காரணம் நேற்று உயிரிழந்திருக்கிறார்.அவரது மறைவு திரை உலகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தஞ்சை மாவட்டத்தை சார்ந்த இனியவன், மறைந்த செய்தி கேட்டு மிகுந்த மனவேதனைக்கு ஆளானேன்.
பல முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றி பெருமை பெற்றவர் இனியவன். கௌரி மனோகரி படத்தில் யேசுதாஸ் மற்றும் எஸ்பிபி இணைந்து பாடிய “அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது” என்ற ஒரு பாடலே அவரின் பெருமையை உணர்த்தும்.
இசையமைப்பாளர் சம்பத் செல்வத்திடம், இசை உதவியாளராக பணிபுரிந்து எனக்கு அறிமுகமானவர் இவர்.. எனது நெருங்கிய நண்பர்.. என்று உருக்கமாக வைரமுத்து பதிவிட்டுள்ளார். இவரின் இறுதி சடங்கு சொந்த ஊரான தஞ்சை பகுதியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்