தமிழில் முன்னணி நாயகியாக வலம் வந்த நடிகை மீரா ஜாஸ்மினுக்கு அண்மையில் துபாய் அரசு 10 ஆண்டுகளுக்கு பயன்படக்கூடிய கோல்டன் விசா வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.
கோல்டன் விசா:
தமிழ் திரை உலகத்தில் காதல் கன்னியாகவும், சுட்டி தனம் நிறைந்த நாயகியாக வலம் வந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். இவர் சண்டக்கோழி, ரன், மெர்க்குரி பூக்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதில், சண்டக்கோழி படத்தில் தாவணி போட்ட தீபாவளி பாட்டில் வரும் “அறுந்த வாலு, குறும்பு தேர்..ஆனாலும் நீ ஏஞ்சல்” என்ற வரிகள் இன்று வரை பட்டி தொட்டி எங்கும் ஒலித்து வருகிறது. இந்த நிலையில், இவருக்கு முக்கிய பெருமை ஒன்றை ஐக்கிய அமீரக அரசு வழங்கியுள்ளது.
அதாவது, 10 ஆண்டுகளுக்கு துபாயில் தங்க கூடிய கோல்டன் விசாவை வழங்கி இவரை பெருமைப்படுத்தியுள்ளது. அண்மையில் இந்த விசாவானது, ஷாருக்கான், மோகன்லால், மம்முட்டி, பிருத்விராஜ், துல்கர் சல்மான், தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோர்க்கு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத் தகுந்தது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்