நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் படத்தை பார்த்த முதல்வர் ஸ்டாலின் கடிதம் வாயிலாக நடிகர் சூர்யாவை வெகுவாக பாராட்டியுள்ளார்.
கடிதம் வெளியிட்ட முதல்வர்:
நடிகர் சூர்யா நடிப்பில் அண்மையில் உருவாகியுள்ள படம் ஜெய் பீம். இந்த படம் நாளை ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. சூர்யா வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பார்த்துள்ளார்.
இதைப் பார்த்த பிறகு அவர் நடிகர் சூர்யாவுக்கு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அப்படத்தை சிறந்ததொரு கலைப்படைப்பு என பாராட்டியுள்ளார். அந்தக் கடிதத்தைப் பார்த்த நடிகர் சூர்யா, “வார்த்தைகள் இன்றி நிகழ்ந்த நிற்கிறேன்”, இந்தப் படத்தின் நோக்கத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றாக புரிந்துள்ளார். எனவே அவருக்கு தமிழக மக்களுக்கும், படக்குழுவினருக்கும் நெஞ்சார்ந்த நன்றி என பதிவிட்டுள்ளார்.
வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உணர்வுப்பூர்வமான பாராட்டு, ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறது. ஜெய்பீம் படக்குழுவினர் அனைவரின் சார்பாகவும் நமது தமிழக முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்… ?? https://t.co/48vBWpdjGm
— Suriya Sivakumar (@Suriya_offl) November 1, 2021
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்