நடிகர் சூர்யா தனது 2டி என்டேர்டைன்மென்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கியுள்ளார்.
நிதி வழங்கிய சூர்யா:
தமிழ் திரை உலகத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் தனது நடிப்பின் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இவர் தனது அகரம் நிறுவனத்தின் மூலமாக பல மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்துள்ளார். இதுவரை பல மாணவர்களின் கல்வித்தரம் இதன் மூலம் உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், இவர் தனது 2டி என்டேர்டைன்மென்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக 1 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். இருளர் இன மக்களின் நலனுக்காக, இந்த தொகையை வழங்குவதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். முதல்வரை நேரில் சந்தித்து காசோலையை வழங்கியதற்கான போட்டோவை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்