20களில் தமிழ் சினிமாவின் கனவு நாயகனாக வலம் வந்தவர் நடிகர் மாதவன். இவரது நடிப்பில் வெளியான அலைபாயுதே, மின்னலே போன்ற திரைப்படங்கள் இன்று வரைக்கும் ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் உள்ளது. தற்போது பாலிவுட்டில் பிசியாக நடித்து வரும் மாதவன், தான் நடித்து இயக்கிய ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படத்திற்காக தேசிய விருதைப் பெற உள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் செயல்பட்டு வரும் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி (FTII) நிறுவனத்தின் தலைவராக நடிகர் மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிறுவனம் மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பின் கீழ், நடிகர் மாதவன் 3 அடுத்த ஆண்டுகளுக்கு FTII தலைவராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.