தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அம்மா உணவகங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இரண்டு பக்கமும் தூக்கி காட்டும் ராசி கன்னா.., இது போதும் எங்களுக்கு இது போதுமே.., மிதக்கும் இளசுகள்!!
கமல் குற்றச்சாட்டு:
முன்னாள் முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டம் மலிவு விலை அம்மா உணவகம். ஏழை எளிய மக்கள் பசியாறுவதற்கு தொடங்கப்பட்ட இந்த திட்டம் கண்டிப்பாக தொடரும் என்று தற்போது பதவியேற்ற திமுக அரசும் அறிவித்தது. இந்த நிலையில், இது குறித்த பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அதாவது, இந்த உணவகங்களில், இரவு நேரத்தில் சப்பாத்தி வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தால் பல மருத்துவமனை நோயாளிகள் பயனடைந்தனர். ஆனால், தற்போது இரவு நேரங்களில் தக்காளி சாதம் வழங்கப்படுவதாக தெரிகிறது. மேலும், மாநகராட்சி அதிகாரிகளால் இங்கு பணியாற்றும் ஊழியர்கள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுகின்றனர். இவ்வாறான செயல்களால் அம்மா உணவகங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன என்றும் இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று கமல் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்