தமிழின் பழம்பெரும் நடிகையான ஜெயக்குமாரி, சிறுநீரகக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில், சிகிச்சைக்கு பணம் என்று தவித்து வருவது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்கள் சோகம்:
தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டத்தில் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்து வந்தவர் ஜெயக்குமாரி. பழம்பெரும் நடிகையான இவர் ரிக்ஷாகாரன், மன்னவன், நாடோடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில் வசித்து வந்த இவருக்கு சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் சிகிச்சைக்கு பணம் இல்லாமல், தனித்து விடப்பட்டுள்ளார். இவர்களது பிள்ளைகளின் உதவியும் இல்லாததால் மருத்துவமனையில் கேட்பாரற்று இருந்து வருகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இது குறித்து பேசிய அவர், முதல்வர் ஸ்டாலின் தனக்கு மருத்துவ உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். பழம்பெரும் நடிகைக்கு ஏற்பட்டுள்ள இந்த சோகம், ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.