இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. ஏகப்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருந்தார். இவரது நடனத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, இவருடைய கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதையடுத்து பல முன்னணி ஹீரோயின்களும் இவரை போல படங்களில் இருக்கும் ஐட்டம் பாடல்களுக்கு ஆடும் வாய்ப்பை ஏற்று நடனமாடி வருகின்றனர். அந்த வகையில் நடிகை தமன்னாவுக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணாவின் படத்தில் டான்ஸ் ஆடும் படி இயக்குனர் அனில் ரவுபுடி கேட்டுள்ளார். அதற்கு 5 கோடி சம்பளம் தரும் படி தமன்னா demand செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இயக்குனர் இது என்ன ஒரு பாடலுக்கு இவ்வளவு சம்பளமா என கோபமடைந்துள்ளார் என்ற செய்தி பரவி வந்துள்ளது.மேலும் இப்படியே இந்த தகவல் பரவினால் சினிமாவில் அடுத்து வாய்ப்பு கிடைக்காது என பயந்துள்ள தமன்னா, இப்படி பொய்யான வதந்திகளை பரப்பாதீர்கள் என கேட்டுள்ளாராம். நான் பாலகிருஷ்ணா sir உடன் நடனமாட போவதை நினைத்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார். அப்படி இருக்கையில் நீங்களாக ஒரு இல்லாத விஷயத்தை பரப்பாதீர்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.