நிறைமாத காவல் அதிகாரிக்கு தாலிபான்கள் செய்த கொடூரம் – குடும்பத்தினர் கண்முன்னே நடந்த சோகம்!!

0

ஆப்கானிஸ்தானை சேர்ந்த 6 மாத கர்ப்பிணி போலீஸ் அதிகாரி, தாலிபான் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கர்ப்பிணிக்கு நடந்த சோகம்:

ஆப்கானிஸ்தானை தாலிபான் பயங்கரவாதிகள் கடந்த சில நாட்களுக்கு முன் கைப்பற்றினர்.  இதனால், இங்கு பாதுகாப்பை உணராத மக்கள் அங்கிருந்து வெளியேற தினமும் காபூல் விமான நிலையத்தை நோக்கி படையெடுத்த வண்ணம் இருந்தனர். இதனால் காபூல் விமான நிலையத்தில் தாலிபான்கள் முழு கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.  இதில் குறிப்பிடத் தகுந்த வகையில், ஆப்கானில் இருந்த அமெரிக்க படைகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், தாலிபான்களுக்கும், பஞ்சூர் மாகாணத்தை சேர்ந்த ராணுவத்தினருக்கும் தற்போது பயங்கர சண்டை நடந்து வருகிறது.  இதில் பஞ்சூரை தாம் கைப்பற்றிவிட்டதாக தாலிபான்கள் அறிவித்தனர்.  அதனை மறுத்த அந்த நாட்டின் ராணுவம் தங்களால் 600க்கும் மேற்பட்ட தாலிபான்கள் கொல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்டோர் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனால் தற்போது அங்கு பதற்ற சூழல் உருவாகி உள்ளது.  இதில், தாலிபான்கள் ஆப்கானை கைப்பற்றிய  போது  பெண்களின் பாதுகாப்புக்கு நாங்கள் முழு உத்தரவாதம் அளிப்பதாக அறிவித்து இருந்தனர்.  இந்த நிலையில், கோர் மாகாணத்தில் பணிபுரியும் 6 மாத கர்ப்பிணியான பெண் காவல் அதிகாரி தாலிபான் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த கொடூர சம்பவம் அந்த பெண்ணின் குடும்பத்தினர் முன்னே நடந்திருப்பதாக தகவல் வந்துள்ளது.  அதனை மறுத்த தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹீத், அந்த பெண் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடப்பதாக தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here