தாலிபான்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது தாலிபான் கலாச்சார ஆணையம் ஒரு கடிதத்தை வெளியிட்டு உள்ளது. அதில் 15 வயதுக்கு மேல் உள்ள இளம் பெண்கள் மற்றும் 45 வயதுக்கு உட்பட்ட விதவை பெண்கள் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் அனைவர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினருக்கும் தாலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில் அந்த பயங்கரவாதிகள் தொடர்ந்து பாதுகாப்பு படையை தாக்கி மிகுதியான சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் வெளியேறி வருகின்றனர். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட பயங்கரவாதிகள் தாக்குதலை படு பயங்கரமாக தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் அதன் கலாச்சார ஆணையம் கடிதம் ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் 15 வயதுக்கு மேல் உள்ள இளம் பெண்கள் மற்றும் 45 வயதுக்கு உட்பட்ட விதவை பெண்கள் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த பெண்களை அந்த படைகளின் போராளிகளுக்கு திருமணம் செய்து வைத்து அவர்களை அடிமையாக்கி,அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்த கூடும் என்ற அச்சம் எழுத்து உள்ளது.
மேலும் அந்த கடிதத்தில்,பெண்கள் தங்கள் வீட்டின் ஆண்களின் துணை இல்லாமல் வெளியே செல்லக்கூடாது, ஆண்கள் தாடியை ஷேவ் செய்தல் கூடாது, புகை பிடிப்பதற்கு அனுமதி மறுப்பு உள்ளிட்டவைகளை தெரிவித்து உள்ளது. தாலிபான்களின் இந்த பெண்களுக்கு எதிரான அடக்குமுறை அனைத்து தரப்பு மக்களின் மத்தியில் மிகுந்த பயத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்