பெண் உரிமை விவகாரத்தில் தாலிபானை விமர்சிக்க வேண்டாம் எனவும் தாலிபான் அமைப்பினருக்கு நிர்வாகத்தை சீர் செய்ய கால அவகாசம் கொடுக்க வேண்டும் எனவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறி பல நாட்கள் ஆகிவிட்ட நிலையில் அங்கு உள்ள ஒட்டுமொத்த மக்களுக்கும் தாலிபான்கள் புது புது அறிவிப்பை விடுத்து வருகின்றனர். அங்கு பெண்கள் மீதான தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கிறது. பெண்களும் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதுகின்றனர். இதனால் அந்த நாட்டை விட்டு வெளியேறவே உள்ளனர்.
அண்மையில் கூட ஆப்கானில் வசித்து வரும் இந்திய பூர்வீகம் கொண்ட ஒருவரை துப்பாக்கி முனையில் கடத்தி விட்டாதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அரசுத்துறை ஊழியர்கள், ராணுவத்தினர், ஆப்கன் அல்லாதவர்கள் என்று பல்வேறு தரப்பினருக்கும் அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பெண்களுக்கு அளிக்கப்படும் உரிமைகளை வைத்து தாலிபானை விமர்சிக்க வேண்டாம் என்றும் அவர்களுக்கு நிர்வாகத்தை சீர் செய்ய சிறிது கால அவகாசம் தரவேண்டும் என தாலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்