உலக அதிசயத்தில் 7 ஆவதாக இருக்கும் தாஜ்மஹால் இந்தியாவில் உள்ள ஆக்ராவில் அமைந்துள்ளது. இந்த தாஜ்மஹால் முகலாய அரசர் ஷாஜஹான் தனது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டியதாக வரலாறு கூறுகிறது. மேலும் இந்த நினைவிடத்தை சுற்றுலா தளமாக இந்திய அரசு அறிவித்த நிலையில் உலகெங்கிலும் உள்ள மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
இப்படி இருக்கையில் இந்து சேனா கட்சி சுர்ஜித் யாதவ் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதாவது தாஜ்மஹாலை ஷாஜஹான் கட்டவில்லை. மாறாக ராஜா மான் சிங்கின் ஆட்சியில் கட்டப்பட்ட அரண்மனையை தான் ஷாஜஹான் சீரமைத்துள்ளார். இதனால் வரலாற்றில் ஷாஜஹான் தாஜ்மஹாலை கட்டினார் என்பதை மாற்றி எழுத வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.