ஆசிய கோப்பை தொடரில் பட்டத்தை வென்ற இலங்கை அணி T20 உலக கோப்பைக்கான தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றால் மட்டுமே பிரதான சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளதாக ICC தெரிவித்துள்ளது.
யாருக்கு அந்த வாய்ப்பு!!
T20 வடிவில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் யாரும் எதிர்பாராத வகையில் இலங்கை அணி வெற்றி பெற்று ஆறாவது முறையாக பட்டத்தை தட்டிச் சென்றது. இதன் மூலம் இந்த அணி தற்போது T20 வடிவில் நல்ல பார்மில் உள்ளனர் என்று தான் தெரிகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய எட்டு அணிகளும் நேரடியாக முன்னேறியுள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனால் மீதமுள்ள நான்கு இடங்களில் மேற்கிந்திய தீவுகள், இலங்கை, நமிபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்காட்லாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய 8 அணிகளும் தகுதி சுற்றில் வெற்றி பெற்றால் மட்டுமே பிரதான சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. இதனால் ஆசிய கோப்பை தொடரை வென்ற இலங்கை அணி தகுதி சுற்று ஆட்டத்தில் சொதப்பினால் T20 உலக கோப்பையில் இடம் பெற வாய்ப்பில்லை.
இந்நிலையில் தகுதி சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழையுமா என்பது சந்தேகத்திற்குரிய விஷியமாக உள்ளது. இது ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் T20 உலக கோப்பைக்கான முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளனர். இதை தொடர்ந்து பரம எதிரியான இந்தியா, பாகிஸ்தான் அடுத்த ஆட்டத்தில் சந்திக்க உள்ளனர்.