T20WC.., ரோஹித் போடும் பலே திட்டம்.., இந்திய அணிக்கு வெற்றி கிடைக்குமா??

0
T20WC.., ரோஹித் போடும் பலே திட்டம்.., இந்திய அணிக்கு வெற்றி கிடைக்குமா??

ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் 11 னில் ஸ்டார் பிளேயர் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணி

உலக கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கின்றன. இதனை தொடர்ந்து இந்திய அணி அடுத்த சூப்பர் 12 ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்ள உள்ளனர். இந்த போட்டியில் மட்டும் இந்திய அணி வெற்றி பெற்று விட்டால் நேரடியாக அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்து விடும்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் இந்த போட்டிக்கான பிளேயிங் 11 னில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்திய அணியில் ஷமி, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தான் இதுவரை நடந்த போட்டிகளில் விளையாடி வருகின்றனர். ஆனால் அடுத்த போட்டியில் இவர்களுடன் சேர்ந்து ஹர்ஷல் பட்டேலை பிளேயிங் 11 னில் கொண்டு வர ரோஹித் முடிவெடுத்துள்ளாராம்.

ISL 2022: சொந்த மண்ணில் கெத்து காட்டிய கோவா…, ஈஸ்ட் பெங்காலை எதிர்த்து சென்னை அணி இன்று பலப்பரீட்சை!!

இதற்கு காரணம் என்னவென்றால் நாளை போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதே மைதானத்தில் தான் உலக கோப்பை தொடருக்கான இறுதி போட்டியும் நடைபெற உள்ளது. இது தவிர மெல்போர்ன் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கை கொடுக்கும் வகையில் இருக்கும் என்பதால் ரோஹித் அதிக வேகப்பந்து வீச்சாளர்களை களமிறக்குகின்றார். எனவே இந்த முயற்சி இறுதி போட்டிக்கு கைகொடுக்குமா? என பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here