டி.ராஜேந்தர் உடல்நிலையில் மோசம் – தீவிர சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லும் குடும்பத்தினர்!

0
டி.ராஜேந்தர் உடல்நிலையில் மோசம் - தீவிர சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து சென்ற குடும்பத்தினர்!

டி.ராஜேந்தர்க்கு நாளுக்கு நாள் உடல்நிலை மிகவும் மோசமாகி கொண்டே செல்வதால் தீவிர சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்து செல்ல குடும்பத்தினர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

டி.ராஜேந்தர் உடல்நிலை:

நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என தமிழ் திரையுலகில் பல துறைகளில் டி.ராஜேந்தர் சிறந்து விளங்கி வருகிறார். சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். தற்போது டி.ராஜேந்தர் உடல்நல குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. கிட்டத்தட்ட நான்கு நாட்களாக டி.ராஜேந்தர்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. டி.ராஜேந்தர் உடலில் தற்போது சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்பு, டி.ராஜேந்தரின் இதயத்தின் வால்வுகளில் அடைப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஏர் ஆம்புலன்ஸ் மூலமாக சிங்கப்பூருக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க குடும்பத்தினர்கள் முடிவு செய்துள்ளனராம். இதற்கு பிறகு டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்தான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் அனைவரும் டி.ராஜேந்தர் மீண்டும் பழையபடி உடல்நிலை தேறி வர வேண்டும் என பிராத்தனை செய்து கொண்டிருக்கின்றனர். விரைவில் டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்தான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here