டி.ராஜேந்தர்
கொரோனாவுக்கு முன்னதாக தியேட்டர்களில் வெளியிடப்பட்டு வந்த திரைப்படங்கள் பல தற்போது ஓடிடி தளம் பக்கம் திரும்பியுள்ளன. கொரோனா பெருந்தொற்று திரையுலகில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். பொது முடக்க காலத்திலும் மக்களை மகிழ்விக்க வேண்டும் என சூர்யா உள்ளிட்ட பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது. மக்களும் தியேட்டருக்கு சென்று திரைப்படங்களை பார்ப்பதை விட ஓடிடி தளத்தில், வீட்டில் இருந்தபடியே பார்க்க விரும்புகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தனுஷுக்கு அடுத்ததாக ஹிந்தியில் கால்பதிக்கும் விஷால் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!
அந்த வகையில் தமிழ் திரைப்படங்களின் இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தர் திரைப்படங்கள் திரையிடுவதற்கு புதிய ஓடிடி தளம் ஒன்றை துவங்கவுள்ளாராம். சமீபத்தில் நடந்த ‘தண்ணி வண்டி’ படத்தின் ட்ரைலர் வெளியீட்டின் போது பேசிய நடிகர் டி.ராஜேந்தர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சிறிய தயாரிப்பாளர்களும், அவர்களது படங்களும் மக்களை சென்று சேர வேண்டும். அதற்காக நான் ஓடிடி தளம் ஒன்றை துவங்குவேன் என கூறியுள்ளார் டி.ராஜேந்திரன்.