அபுதாபியில் அடுத்த மாதம் இறுதியில் நடக்கவிருக்கும் டி 10 போட்டியில் கெய்ல், ரஸ்ஸல் மற்றும் அப்ரிடி போன்ற வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அபுதாபி டி 10 தொடர் :
ஐந்து நாள் டெஸ்ட், 50 ஓவர் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் என 3 படிவங்களில் சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாடப்படுகிறது. இதை ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக கண்டுகளித்து வருகின்றனர். தற்போது இதே போல் 10 ஓவர் கிரிக்கெட் போட்டிகளும் நடைபெற்று வருகிறது. ஆனால் இது சர்வதேச அளவில் விளையாடவில்லை. லீக் சுற்றுகள் மட்டும் நடந்து வருகிறது. இதனை ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழிலதிபரான ஷாஜி உல் முல்க் என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
மேலும் இதற்கு ஐசிசி அனுமதி வழங்கியுள்ளது. நவம்பர் மாதம் 19ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை இந்த போட்டியை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக அதை ரத்து செய்தனர். தற்போது அபுதாபியில் அடுத்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷார்ஜாவில் நடந்த போட்டிகள்:
மொத்தம் இதில் 8 அணிகள் பங்கு பெரும் என்றும் அறிவித்துள்ளார்கள். 2019 ஆம் ஆண்டில் இருந்து அடுத்த 5 ஆண்டிற்கு இந்த தொடரை அபுதாபியில் வைத்து நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். முதல் இரண்டு போட்டிகள் ஷார்ஜாவில் வைத்து நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி – ரசிகர்கள் அதிர்ச்சி!!
இந்த ஆண்டு அபுதாபி 10 போட்டிகளில் கெய்ல், அப்ரிடி, ரஸ்ஸல் போன்ற அதிரடி வீரர்களும் கலந்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்கள். மேலும் பிராவோ , நரேன் போன்ற வீரர்களும் பங்கேற்கவுள்ளார்கள். அபுதாபி அணியில் கெய்லும், தில்லி புல்ஸ் அணியில் ப்ராவோவும், நாரதன் வாரியர்ஸ் அணியில் ரஸ்ஸலும் மற்றும் டெக்கான் கிளாடியர்ஸ் அணியில் நரேனும் இடம் பெற்றுள்ளார்கள்.