சையது முஸ்தாக் அலி டி 20 போட்டி வரும் ஜனவரி மாதம் தொடங்குகிறது. அதற்கான லீக் சுற்றுகள் நடைபெறுவதற்காக 6 நகரங்களை அறிவித்துள்ளது.
சையது முஸ்தாக் அலி :
கொரோன அச்சம் காரணமாக உள்ளூர் போட்டிகள் நடத்துவதற்கு தாமதமாகி வருகிறது. இந்த கொரோன காலத்திலும் ஐபில் போட்டியை பிசிசிஐ மிகவும் சிறப்பாக நடத்தியது. எனவே தற்போது உள்ளூர் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். அதில் முதலாவதாக சையது முஸ்டாக் அலி போட்டி நடக்க உள்ளது. இப்போட்டி வரும் ஜனவரி 10 முதல் 31 வரை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். ரஞ்சி கோப்பை மற்றும் விஜய் ஹசாரே கோப்பை போட்டிகளின் அறிவிப்பு சையது முஸ்தாக் அலி போட்டி முடிந்த பின்பே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் சையது முஸ்தாக் அலி கான போட்டியில் பங்கேற்கும் அணிகள் தங்களது அணிக்கான வீரர்களை தேர்வு செய்து வருகின்றனர். தற்போது சையது முஸ்தாக் அலி கான லீக் போட்டிகள் எந்தந்த நகரங்களில் நடைபெறும் என்பதை அறிவித்துள்ளார்கள். சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, வதோரா, மற்றும் இந்தூர் ஆகிய நகரங்களில் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். இந்த ஆறு நகரங்களிலும் வீரர்களுக்கான கொரோன பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 38 அணிகள் இடம் பெற்றுள்ளனர். அந்த அணிகள் 5 பிரிவுகளை பிரிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாடு அணி குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ளது. தமிழ்நாடு அணி தங்களது லீக் போட்டிகளை கொல்கத்தாவில் விளையாட போவதாக தெரிகிறது.
உலக கோப்பை மல்யுத்தம் – வெள்ளி பதக்கம் வென்ற இந்தியா வீராங்கனை :
அதேபோல் ஜனவரி 26 தேதி முதல் நாக்-அவுட் சுற்றுகள் நடைபெறும் என்று அறிவித்தனர். இந்த சுற்றுகள் அஹமதாபாத்தில் வைத்து நடைபெறும். அங்கும் கொரோனா பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காலிறுதி ஆட்டங்கள் ஜனவரி 26 மற்றும் 27 தேதிகளில் நடைபெறும். அரையிறுதி ஆட்டம் ஜனவரி 29ஆம் தேதி நடைபெறும். அதன்பின்பு சையது முஸ்தாக் அலி கான இறுதி போட்டி 31ஆம் தேதி அன்று நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்கள்.