கோவையில் பிச்சை எடுக்கும் ஸ்வீடன் தொழிலதிபர்..! காரணம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க…!

0

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் கிம் கோயம்புத்தூரில் உள்ள நகர்களில் பிச்சை எடுத்து வருவதை அனைவரும் அதிசயமாக பார்த்துச் செல்கின்றனர். அதற்கு அவர் கூறும் காரணமும் நம்மை மேலும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.

கோவை ஈஷா யோகா மையம்!!

இந்தியாவிற்கு சுற்றுலாவாக வந்த ஸ்வீடன் தொழிலதிபர் கிம் முதலில் பல இடங்களைச் சுற்றிப் பார்த்தார். பின்பு கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு வந்த அவர் சில நாட்கள் தங்கி இருந்தார். அங்கிருந்தும் கிளம்பிய அவர் கோவை பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிச்சை எடுத்து வருகிறார். தனக்கு பிச்சை போடுபவர்களுக்கு இருகரம் கூப்பி நன்றியும் கூறுகிறார்.

என்ன காரணம்..?

ஸ்வீடனில் பெரிய தொழிலதிபரான கிம் தன்னுடைய மன நிம்மதிக்காக பிச்சை எடுத்து வருவதாக தெரிவித்து உள்ளார். ஸ்வீடனில் மக்களுக்கு என்னால் முடிந்த நல்லதுகளை செய்தும் எனக்கு மன நிம்மதி கிடைக்காததால் இதை செய்து வருவதாக அவர் கூறுகிறார். அவரை ஆச்சர்யத்துடன் பார்க்கும் மக்கள் 10 ரூபாய் வரை பிச்சையாக அளித்துச் செல்கின்றனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here