பிரபல பாடகியான சுசித்ரா சமூக வலைதளங்களில் ஏற்பட்ட பல பிரச்சனைகள் காரணமாக சில காலத்திற்கு மீடியா பக்கத்திற்கு வராமல் இருந்தார். இந்நிலையில் தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘RIP இப்படி எழுத கஷ்டமாக இருக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார். பிரபல பாடகர் எஸ்பிபி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது இவர் இப்படி பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுசித்ரா:
தமிழில் முன்னணி பாடகர்களில் ஒருவர் தான் சுசித்ரா. தமிழில் பல பாடல்கள் மட்டுமல்ல படங்களுக்கு குரலும் கொடுத்துள்ளார். 2017 இல் இவர் ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படங்கள், கருத்துக்கள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. திரையுலகை சேர்ந்த பலரின் அந்தரங்கத்தை வெளியிட்டார். சுஜி லீக்ஸ் என்றாலே நினைவுக்கு வருவது இதுதான்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
தனுஷ், அனிருத் , ஆண்ட்ரியா, செல்வராகவன், டிடி போன்றவர்களின் வீடியோவை வெளியிட்டார். இது திரையுலகையே ஸ்தம்பிக்க வைத்தது. மேலும் அந்த பதிவுகளை தான் வெளியிடவில்லை என்றும் போலீசாரிடம் புகாரளித்தார். இந்த பிரச்சனைக்கு பிறகு அவர் சமூக வலைதளங்களுக்கு வருவதை தவிர்த்து வந்தார்.
#rip … can’t get myself to type the rest ?
— Suchitra (@suchi_mirchi) September 25, 2020
தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ‘RIP இப்படி எழுத கஷ்டமாக உள்ளது’ என பதிவிட்டுள்ளார். இதனால் பலர் குழப்பமடைந்துள்ளனர். ஏனெனில் பின்னணி பாடகரான எஸ்.பி.பி அவர்கள் மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இவரின் இந்த பதிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.