சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு – முன்னாள் காதலி ரியா சக்ரபோர்த்தி கைது!!

0

பிரபல பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது மரணத்தில் சந்தேகம் நிலவியதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இது தொடர்பாக விசாரணை வளையத்தில் இருந்த சுஷாந்தின் முன்னாள் காதலி ரியா இன்று கைது செய்யப்பட்டு உள்ளார்.

போதைப் பொருள் புழக்கம்:

சமீப காலமாக சினிமா துறையில் போதைப் பொருட்கள் புழக்கம் மிக அதிகமாக உள்ளது. இது தொடர்பாக பிரபல நடிகைகள் ராகினி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கிலும் போதைப் பொருள் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இது தொடர்பாக ரியா சக்ரபோர்த்தியின் தொலைபேசியிலிருந்து பெறப்பட்ட வாட்ஸ்அப் மெசேஜ் விபரங்கள் அடிப்படையில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு விசாரணைகளைத் தொடங்கியது. அந்த சாட்களில் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்காக போதை மருந்துகளை வாங்குவது பற்றிய உரையாடல்கள் இருந்துள்ளது. இது தொடர்பாக ரியா சக்ரபோர்த்தியை மூன்று நாட்கள் விசாரித்த பின்னர் மும்பையில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு கைது செய்துள்ளது.

Sushant singh & Rhea chakraborthy
Sushant singh Rajput & Rhea chakraborthy

ஜிம் ட்ரைனருக்கு ரூ.73 லட்சம் காரை பரிசாக வழங்கிய பிரபாஸ் – வைரலாகும் புகைப்படம்!!

அவரிடம் நடத்திய விசாரணையில், ​​சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு போதை மருந்துகளை ஏற்பாடு செய்ததாகவும், சில சமயங்களில் அவற்றை தானும் உட்கொண்டதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். அவரது சகோதரர் ஷோயிக் சக்ரபோர்த்தி கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். ரியா மற்றும் அவரது சகோதரர் ஷோயிக் சக்ரவர்த்தியின் தூண்டுதலின் பேரில், மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் மொத்தம் 165 கிராம் கஞ்சா சுஷாந்திற்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here