சுஷாந்த் சிங் ராஜ்புத் கடைசியாக நடித்த தில் பெச்சாராவின் டிரெய்லர் வெளியானவுடன், 24 மணி நேரத்திற்குள் 10 கோடி பார்வைகளையும் ஒரு கோடி லைக்குகளையும் பெற விரும்புவதாக நிட்டிகாரு பதிவிட்டுள்ளார்.
தில் பெச்சாரா ட்ரைலர்:
மும்பையில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்துள்ள ‘தில் பெச்சாரா’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக பலரும் கூறிய நிலையில், அது தற்கொலை தான் என பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்தது. அதற்காக சுஷாந்த் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் வைரலாகி உள்ளது. சுஷாந்த் சிங்கின் நடிப்பின் கடைசி படம் என்பதால் இதை OTT வழியாக வெளியிட வேண்டாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வேண்டுகோள் விடுக்கின்றனர். அக்கறையற்ற மனதுடன் இந்த படத்தை தொலைக்காட்சியில் பார்க்க வேண்டும் என்பது வருத்தமளிக்கிறது.
இந்நிலையில் தற்போது இதன் ட்ரைலர் வெளியிடப்பட்டு சில மணிநேரத்தில் 5 லட்சம் பார்வையாளர்களை எட்டி உள்ளது. இதுவரை வெளியான படங்களின் ட்ரைலர்களை விட இதனை அதிகம் பார்வைகள், லைக்குகள் உடன் அதிகம் பார்க்கப்பட்ட ட்ரைலர் ஆக மாற்ற வேண்டும் என சுஷாந்த் சிங் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.