சுஷாந்த் சிங் வாழ்க்கை வரலாற்று படத்தை வெளியிட தடை – கவலையில் ரசிகர்கள்!!

0

தல தோனியின் பயோபிக் திரைப்படத்தில் நடித்தவர்தான் சுஷாந்த் சிங் ராஜ்புட். சில தனிப்பட்ட காரணங்களால் தற்கொலை செய்துகொண்ட இவரது பயோபிக் படமாக்கப்பட்டு வந்த நிலையில் திரைப்படத்தை வெளியிடுவதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

பயோபிக் :

தனது நடிப்பு திறமையாலும் உதவும் மனப்பான்மையால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். இவர் விளம்பர படங்கள் மற்றும் சீரியல் என தனது வாழ்க்கையை துவங்கி அனைவரின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். இவர் தல தோனியின் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி பயோபிக் மூவீ நடித்தார். அதில் இவர் நடித்தார் என்பதை தாண்டி தல தோணியாகவே வாழ்ந்தார் என கூறுவது மிகயாகாது.

அந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் தனிப்பட்ட காரணங்களால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இவரது இறப்பு சினிமாத்துறையில் பெரும் இழப்பு என கூறப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இவரது வாழ்க்கை வரலாற்றை வைத்து திலீப் குலாட்டி இயக்கி, ஜுபர் கானும், ஷ்ரேயா சுக்லாவும் நடித்துள்ள திரைப்படமானது ஜூன் 11 ஆம் தேதி வெளியாகவிருந்தது. இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் அவர்களின் தந்தை தொடுத்த வழக்கின் காரணமாக படம் வெளியாகாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கடும் வருத்தத்தில் உள்ளனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here