நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சொற்ப ரன்களில் சூர்யகுமார் யாதவ் வெளியேறியதால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தை அடைந்துள்ளனர்.
சூர்யகுமார் யாதவ்:
இந்தியாவின் ஏபி டிவில்லியர்ஸ், 360 டிகிரி நாயகன் என ரசிகர்களால் பல பெயர்களில் சூர்யகுமார் யாதவ் அழைக்கப்பட்டு வருகிறார். இவர், இந்த வருடத்தில் மட்டும் டி20 போட்டிகளில் பல சாதனைகளை படைத்துள்ளார். அதில், குறிப்பாக டி20 உலக கோப்பையில் 6 போட்டிகளில், 3 அரைசதங்கள் உட்பட 239 ரன்கள் எடுத்திருந்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த டி20 உலக கோப்பை நடைபெறும் போதே, ஐசிசி வெளியிட்ட டி20 போட்டிகளின் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், முதலிடத்தை பிடித்து அசத்தினார். இதனை தொடர்ந்து, சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சதம் (111*) அடித்து, ஒரே ஆண்டில் டி20 போட்டியில் 2 சதம் அடித்த வீரர் என்ற பெருமையும் தட்டி சென்றார். இதன் மூலம், ஐசிசியின் நம்பர் 1 இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
உலக கோப்பைக்கு முன் இந்திய அணி போட்ட திட்டம்…, நாளை முதல் செயற்படுத்த போறாங்களா??
இந்நிலையில், கடந்த ஜூலை மாதத்திற்கு பிறகு, ஒரு நாள் போட்டியில் தற்போது தான் சூர்யகுமார் யாதவ் களமிறங்கி உள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர், 4 ரன்களில் வெளியேறி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளார். இவர், மீதமுள்ள 2 போட்டிகளில் தனது அதிரடியை வெளிப்படுத்தினால், இந்தியாவின் டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.