ஒருநாள் போட்டிகளில் தடுமாறி வரும் சூர்யகுமார் தான், எதிர்வரும் உலக கோப்பைகளை இந்தியாவுக்கு வென்று கொடுக்க முக்கிய பங்கு வகிப்பார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கூறியுள்ளார்.
சூர்யகுமார் யாதவ்:
இந்திய அணி சமீபத்தில் தான் நியூசிலாந்துக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி முடித்தது. இந்த தொடர்களில், இந்திய அணி டி20யை கைப்பற்றினாலும், ஒரு நாள் தொடரை கைப்பற்ற தவறியது. இந்த ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமாரும் இடம்பெற்றிருந்தார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட்டு சதம் அடித்த சூர்யகுமார் யாதவ், ஒரு நாள் போட்டிகளில் சோபிக்க தவறினார். இவர், மூன்று ஒருநாள் போட்டிகளில் 4, 34* மற்றும் 6 என சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதனால், இவர் டி20 போட்டிகளுக்கு மட்டும் தான் சரிப்பட்டு வருவார் என விமர்சனங்கள் வர தொடங்கின.
விராட் கோஹ்லியின் பெஸ்ட் சிக்ஸர் இது தான்…, பந்து வீசிய பாகிஸ்தான் வீரர் பளிச் பேட்டி!!
இந்நிலையில், இந்திய அணி எதிர்வரும் உலக கோப்பையை வெல்வதற்க்கு சூர்யகுமார் யாதவ் முக்கிய பங்கு வகிப்பார் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரட் லீ கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ், ஆஸ்திரேலியா போன்ற கடினமான களத்திலேயே எதிரணியின் பந்து வீச்சை பதற்றம் இல்லாமல் எதிர்கொண்டு அதிரடி காட்டி இருந்தார். இதனால், கிராண்ட் மாஸ்டராக திகழும் இவர், உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன்னாக வலம் வருகிறார். இவரது போக்கிலேயே இவரை விட்டால், மேலும் சிறப்பாக செயல்படுவார் என பிரட் லீ கூறியுள்ளார்.