உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சூர்ய குமார் இடம் பிடித்துள்ள நிலையில் இவரிடம் ரசிகர்கள் பல கேள்வி எழுப்பி வருகின்றனர். அதாவது ஆஸ்திரேலியா உள்ள மைதானங்கள் அனைத்தும் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகவும் அளவில் பெரியதாகவும் இருக்கும். மேலும் அங்குள்ள பிட்சுகளில் பந்துகளுக்கு அதிக வேகமும், பவுன்ஸும் கிடைக்கும். இதனால் பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒவ்வொரு பந்தையும் எதிர்கொள்வதற்கு மிகவும் சிரமப்படுவர்.
இந்நிலையில் சூர்ய குமார் இதுவரை ஸ்லோவான பிட்சுக்களில் மட்டும் விளையாடியுள்ளார். இதனால் ஆஸ்திரேலிய களத்தை எப்படி சமாளிக்க போகிறீர்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு சூர்ய குமார் தற்போது பதிலளித்துள்ளார். அதாவது ஆஸ்திரேலியா களத்திற்கு ஏற்றவாறு “தனது பேட்டிங் ஸ்டைலை” மாற்றி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த மைதானத்தில் நான் முதல் முறையாக விளையாட உள்ளேன்.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
இதனால் அங்கு எந்த முறையில் ஆட வேண்டும் என ரோஹித்திடம் நிறைய விஷயங்கள் கேட்டு வைத்துள்ளேன். அதற்கேற்றாற் போல் தற்போது பயிற்சி பெற்று வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் இவர் அண்மையில் நடைபெற்ற T20 போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய ரசிகர்களால், 360 டிகிரி என செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார்.