நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் 2ம் தேதி நான்கு மொழிகளில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வந்துள்ளது.
ஜெய்பீம்:
சூர்யாவின் 39-வது படத்தை இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கி உள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காக போராடும் ஒரு வழக்கறிஞரின் கதையை பேசுவதாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இதுவரை நடிக்காத வழக்கறிஞர் வேடத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.
ஜெய் பீம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற நவம்பர் 2-ந் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவரின் சூரரை போற்று என்ற படம் இதே ஓடிடி தளத்தில் வெளியாகி அமோக ஆதரவை பெற்றது போலவே இந்த படமும் மக்களின் ஒருமித்த ஆதரவை பெரும் என்பது சூர்யா ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்