ஒவ்வொரு வருடமும் மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் கதாநாயகர்களுக்கு உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு சூர்யா, ஜோதிகா மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இந்த வருடம் தேர்வாகியுள்ளனர்.
பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் தனுஷ் – தீயாய் பரவும் புகைப்படம்!!
உலகளாவிய சமுதாய ஆஸ்கார் விருது:
சமுதாய மக்களை வலுப்படுத்துவதில் முக்கிய பங்களிப்பை கொடுத்து, மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கதாநாயகர்களுக்கு உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த விருதுக்கான பட்டியலை அமெரிக்க பிரதிநிதியின் உறுப்பினரான டேனி கே டெவிஸ் வெளியிட்டுள்ளார். ஜெய் பீம் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஞானவேல் இயக்கத்தில் உருவான ஜெய்பீம் திரைப்படம் 1993 ஆம் ஆண்டில் நடந்த பார்வதியம்மாளின் வாழ்க்கை சம்பவத்தை வைத்து உருவாக்கப்பட்டது.
இந்த திரைப்படம் சமூதாயத்தில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான சூர்யா மற்றும் ஜோதிகா உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். ‘சர்வதேச வளரும் நட்சத்திரம் 2021′ என்ற பிரிவில் உதயநிதி ஸ்டாலின் இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளார். மக்களுக்கு ஆற்றும் பணிகளுக்காக இந்த விருது இவருக்கு வழங்கப்படுகிறது. இந்த விருது வழங்கும் விழா பிப்ரவரி 19-ந் தேதியன்று இலினொய் மாகாணத்தில் நடைபெற உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்