தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவராலும் விரும்பப்படும் ஜோடி என்றால் அது சூர்யா, ஜோதிகா தம்பதி தான். பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க என இவர்களின் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதோடு இந்த காதல் ஜோடியும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளனர்.
காக்க காக்க படத்தில் இருந்தே இவர்களது காதல் படுமுகக்கமாக வளர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த செய்திகள் கசியத் தொடங்கிய போது இருவரும் அதை மறுக்கவும் இல்லை, ஆமாம் என்று ஆமோதிக்கவும் இல்லை. பின்னர் பெரும் போராட்டத்துக்கு பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் சூர்யா, ஜோதிகா திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களின் திருமணத்திற்கு பின்பும் மற்ற காதல் ஜோடிகளுக்கு முன் மாதிரியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களுடைய 15 வது திருமண நாளை இன்று கொண்டாடுகின்றனர். இதை ஜோதிகா சமீபத்தில் தொடங்கிய தன் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் தெரிவித்து, தனது கணவர் சூர்யாவிற்கு தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஒரு கேப்ஷனையும் வைத்து உள்ளார்
View this post on Instagram
அதில் அவர் இந்த திருமணம் 15 வருட மகிழ்ச்சி எனவும், தங்களை வாழ்த்திய அனைவரின் அன்புக்கும் ஆசிகளுக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். தற்போது ரசிகர்கள் சூர்யாவிற்கும் ஜோதிகாவிற்கும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்