ஊரடங்கால் வாழ்வாதாரமின்றி தவித்த ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த 250 பேருக்கு நடிகர் சூர்யா தலா 5,000 ரூபாயை அவர்களது வங்கி கணக்கிற்கு அனுப்பி நிதியுதவி செய்துள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வலம் வரும் நடிகர் சூர்யா. படிக்க வசதியின்றி தவிக்கும் ஏழை மாணவர்களுக்காக ‘அகரம்’ என்கிற அறக்கட்டளை நிறுவி பல குழந்தைகளின் கல்விக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார். சமீபத்தில் கூட சிவகுமார், சூர்யா, கார்த்திக் ஆகியோர் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கினர்.
நடிகர் சூர்யாவுக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. பின்னர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன் என்று நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். மேலும் அவர் அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளையும் தெரிவித்தார்.
இந்நிலையில் நடிகர் சூர்யா கொரோனா ஊரடங்கால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த 250 பேருக்கு தலா 5,000 ரூபாயை சூர்யா அவர்களின் வங்கி கணக்கு மூலம் அனுப்பியுள்ளார்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!