நடிகர் சூர்யா நான்காவது முறையாக இயக்குநர் பாலாவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தெரிவித்து ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளார்.
பாலாவுடன் சூர்யா:
தமிழ் திரையுலகத்தின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் உருவான ஜெய் பீம் திரைப்படம் வருகிற நவம்பர் இரண்டாம் தேதி ரிலீசாக உள்ளது. இதையடுத்து வாடிவாசல், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது இயக்குனர் பாலா உடன் 4வது முறையாக கூட்டணி அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே இவர் இயக்குனர் பாலாவுடன் நந்தா, பிதாமகன், மாயாவி உள்ளிட்ட படங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து சூர்யாவின் இந்த திரைப்பட கூட்டணி பற்றிய அறிக்கை ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்…
ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்..
20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்…
அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்…
அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்… pic.twitter.com/H9wyutZD3h— Suriya Sivakumar (@Suriya_offl) October 28, 2021
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்