தற்போது மீடியாவில் வனிதா-பீட்டர் பால் பிரேக்கப் பற்றிய விஷயங்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் வனிதாவை கேவலமாக கிழித்து வீடியோ வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கிய சூர்யா தேவி இந்த பிரேக்கப் பற்றி தனது கருத்துக்களை வெளியிட்டு உள்ளார்.
சூர்யா தேவி
வனிதா லாக்டவுன் சமயத்தில் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். பலரும் இதற்கு அவரை இழிவாக பேசி கமன்ட் செய்வதும், வீடியோ வெளியிடுவதும் வழக்கமாக வைத்திருந்தனர். அதில் சூர்யா தேவி என்பவர் வனிதாவை மிகவும் இழிவான வார்த்தைகளில் திட்டி வீடியோவை வெளியிட்டார். இது போலீஸ் கேஸ் வரை சென்று பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
சூர்யா தேவி மட்டுமல்ல ரவீந்தர், லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி என பல பிரபலங்கள் இதனை கண்டித்து வீடியோ வெளியிட்டனர். பீட்டர் பாலுக்காக அனைவரையும் எதிர்த்து நின்றார் வனிதா. தற்போது இருவருக்கும் இடையே பிரேக்கப் ஆனதை தொடர்ந்து அதற்கான காரணத்தையும் வனிதா கூறியிருந்தார்.
அந்த வீடியோவிற்கு பதிலடி கூறும் விதமாக தற்போது சூர்யா தேவி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது, இதுவரையிலும் வனிதா கூறியதை தன்னால் முழுமையாக நம்ப முடியவில்லை. மேலும் பீட்டர் பாலை பற்றி எவ்வளவு எடுத்து கூறினோம். அவரின் முதல் மனைவி எலிசபெத் அவரை பற்றி கூறியும் நீ எதையும் நம்பவில்லை. இப்பொழுது நீ படும் கஷ்டத்தை தான் எலிசபெத் அக்காவும் பட்டார்.
மேலும் உன் குழந்தைகள் மற்றும் உனக்காக மக்கள் பீட்டர் பாலை பற்றி எவ்வளவு கூறியும் அவர்களை நம்பாமல் சாக்கடை, புத்தி கெட்டவன் என கூறினாய். ஆனால் அவர்கள் தான் இப்பொழுது உனக்கு ஆறுதலாக பேசுகின்றனர். மேலும் பீட்டர் பால் உடல் நிலையை குறித்தும் கூறி இருந்தார்.
அதாவது பீட்டர் பால் இப்பொழுது இருக்கும் நிலையில் அவர் இறந்து விட்டால் அந்த பலி உன் மீது தான் விழும். அதற்காக தான் நீ இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறாய் என்று கூறியுள்ளார் சூர்யா தேவி. மேலும் வனிதா வெளியிட்ட வீடியோவில் அவர் இதுவரை நடந்ததிற்கான சிசிடிவி வீடியோ ஆதாரத்தை கையில் வைத்திருப்பதாக கூறி இருந்தார். இப்பொழுது சூர்யா தேவி சொல்லும் விஷயத்தை வைத்து பார்க்கும்போது அவர் சொல்வது உண்மையாக இருக்கலாம் என பொதுமக்கள் கூறி வருகின்றனர்.