மீண்டும் ஆரம்பமாகிறது சூர்யா 40 ஷூட்டிங்…!வெளியான ருசிகர தகவல்!!!

0

கொரோனா பெருந்தொற்று காரணமாக பல வேலைகள் முடங்கி உள்ளன. அந்த வகையில்  பல்வேறு படங்களின் படப்பிடிப்புகள் தள்ளிவைக்கப்பட்டது. அந்த வரிசையில்  சூர்யா 40 படப்பிடிப்பும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அதன் படப்பிடிப்பு மீண்டும் ஜூலை 12ஆம் தேதி படக்குழு தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் தான் சூர்யா 40. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மேனன் நடித்து வருகிறார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண் உட்பட பலர் இந்த படத்தில் பல முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்திற்கு  இமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் பூஜைகளுடன் தொடங்கியது. மேலும் இதன் படப்பிடிப்பு  புதுக்கோட்டை, நெல்லை சுற்றுவட்டாரங்களில் நடந்து வந்தது. இதன் படப்பிடிப்பு 35 சதவீதம் முடிவடைந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது.

தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் படப்பிடிப்பை தொடர படக்குழு முடிவெடுத்து உள்ளது. அதன்படி சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பு ஜூலை 12ஆம் தேதி காரைக்குடியில் தொடங்க உள்ளதாக தெரிவித்து உள்ளது. இந்த தகவல்கள் அவரின் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here