சர்வைவர் டைட்டில் வின்னர்க்கு பரிசு தொகை இன்னும் வரலையா? – விஜயலக்ஷ்மி புகார்!!

0

ஜீ தமிழில் வெளிவந்த சர்வைவர் நிகழ்ச்சியில் சமீபத்தில் இறுதி சுற்று நடைபெற்று முடிவடைந்தது. இந்த இறுதி சுற்றில் முதல் பரிசை தட்டிச் சென்ற விஜயலக்ஷ்மிக்கு இன்னும் அந்த பரிசு தொகை வழங்க வில்லை என புகார் கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

விஜயலக்ஷ்மி:

விஜயலக்ஷ்மி, தமிழ் திரைப்பட நடிகையான இவர் திரைப்பட இயக்குநர் அகத்தியனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சென்னை 28, சென்னை 28 II, அஞ்சாதே ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் சின்னத்திரை தொலைக்காட்சி தொடர்களில் நடிகையாகவும் நடித்தார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் ஷோவில் பங்கு பெற்றார். இந்த ஷோ சமீபத்தில் தான் நிறைவடைந்தது.

இந்த நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் விஜயலக்ஷ்மி டைட்டில் வின்னராகி ஒரு கோடி ரூபாய் பரிசையும் வென்றார். தற்போது இது குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில் நான் வின்னர் ஆனாலும் வெற்றி பெற்ற பரிசு தொகை இன்னும் கைக்கு வரவில்லை எனவும், அந்த பணம் வர இன்னும் சில மாதங்கள் ஆகும் எனவும் கூறியுள்ளார். நிகழ்ச்சி முடிந்து இவ்வளவு நாட்கள் கழித்தும் பணம் வரவில்லையா என ரசிகர்களே வியப்பில் தான் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here