பிரபல நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!

0

புகழ் பெற்ற ஹிந்தி நடிகை சுரேகா சுக்ரி மாரடைப்பால் திடீர் மரணத்தை தழுவியுள்ளார். இவர் மூன்று முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் மரணம் திரையுலகத்தினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

சுரேகா சிக்ரி, இவர் கிசா குர்சி கா என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்தவர். இப்படம் 1978 ஆம் ஆண்டு வெளியானது. அந்த படத்தை தொடர்ந்து தமாஸ், மம்மோ, பதாய் ஹோ, பாலிகா வது ஆகிய படங்களில் நடித்தார். இவரின் நடிப்பை பாராட்டி இவருக்கு மூன்று முறை தேசிய விருது வழங்கப்பட்டது.

வெள்ளித்திரை தாண்டி சின்ன திரையிலும் இவர் தன் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இவர் நடித்த ஹிந்தி சீரியல் தமிழில் மண் வாசனை என மொழி பெயர்க்கப்பட்டு ஒளிபரப்பட்டது. இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்துள்ளார். இவரின் இறப்புக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here