7 பேருக்கு மறுவாழ்வு அளித்த 2 வயது குழந்தை – மனதை உருக்கிய சம்பவம்!!

0

மூளைச்சாவு அடைந்த தனது இரண்டரை வயது மகனின் உறுப்புகளை உலகில் உள்ள 7 பேருக்கு வழங்கி அவர்களை அனைவரும் திடமாக வாழ உதவி புரிந்துள்ள சம்பவம் பலரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

மூளைச்சாவு அடைந்த மகன்:

மூளைச்சாவு என்பது கிட்டத்தட்ட மரணத்திற்கு சமமான ஒரு விஷயம் ஆகும். தன்னிலை இழந்த நிலையாகவும் கருதப்படுகிறது. அப்படி மூளைச்சாவு அடைந்தவரின் துயரமான விஷயம் என்னவென்றால் அவரது உறுப்புக்கள் சரிவர செயல்படும் என்பதே ஆகும். அப்படி மூளைச்சாவு அடைந்த தனது மகனின் உறுப்புகளை 7 பேருக்கு அவனது பெற்றோர்கள் வழங்கியுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சூரத்தின் பாதர் பகுதியில் உள்ள சாந்தி பேலசை பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ் ஒஷா. இவரது மனைவி அர்ச்சனா. இவர்களுக்கு இரண்டரை வயதில் ஜாஷ் ஒஷா என்ற ஆண் குழந்தை உள்ளது. கடந்த 9 ஆம் தேதி குழந்தை விளையாடி கொண்டு இருக்கும் போது இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளது.

உடல் உறுப்பு தானம்:

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவனை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை மூளைச்சாவு அடைந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தங்களுடைய மகன் இனி பிழைக்க மாட்டான் என்பதனை உணர்ந்த பெற்றோர்கள் அந்த துயரமான வேளையிலும் தங்களுடைய மகனின் உறுப்புக்கள் மூலம் பலரை வாழ வைக்கவேண்டும் என்றுமுடிவெடுத்துள்ளனர்.

யோகா’விற்கு விளையாட்டு போட்டி அந்தஸ்து – மத்திய அமைச்சகம் அறிவிப்பு!!

இதனை அடுத்து மருத்துவர்களிடம் தங்களது மகனின் செயல்படும் உறுப்புகளை தானம் எடுத்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். குழந்தையின் சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், கண்கள் மற்றும் இதயம் எடுக்கப்பட்டுள்ளது. இது இந்தியா உட்பட உலகில் உள்ள நாடுகளில் வசிக்கும் 7 பேர்க்கு மறுவாழ்வு அளிக்க உதவியுள்ளது. உலகில் சிறந்த தானம் உடல் உறுப்பு தானம் என்பதனை ஜாஷ் ஒஷாவின் பெற்றோர்கள் உலகிற்கு உணர்த்தியுள்ளனர்.

இதயம் ரஷ்யாவை சேர்ந்த 4 வயது சிறுமிக்கும், சிறுநீரகம் இந்தியாவை சேந்த 13 வயது மற்றும் 17 வயது சிறுமிகளுக்கும், நுரையீரல் உக்ரைனை சேர்ந்த 4 வயது சிறுமிக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here